அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

யாழ், கிளிநொச்சியில் காணி கோரும் இராணுவம்: யாழ்.பிராந்திய பணிப்பாளர்



(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் தேவைக்காக காணிகளை வழங்குமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது என்று அவ்வாணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிப்பாளர் விமலராஜ் தெரிவித்தார்.

கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பலவற்றைப் பெறுவதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 26 ஏக்கர் காணி இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக காணி சீர்த்திருத்த ஆணைக்குழு தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவினால் பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட காணி உரிமப் பத்திரங்களைத் யுத்த காலத்தில் தொலைத்தவர்கள் மீண்டும் உரிமப் பத்திரங்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்காக வாக்காளர் அடையாள அட்டை, குறித்த பகுதியில் வசித்ததை உறுதிப்படுத்தி கிராம அலுவலர், பிரதேச அலுவலர் ஆகியோரின் கடிதங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றோடு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் யாழ் பிராந்தியத்துடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்குரிய உரிமங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter