அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 22 அக்டோபர், 2012

கிணற்று நீர் வரி அறவீட்டுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்ப்பு



'கிணற்று நீர் பயன்பாட்டுக்கு  வரி அறவிடுவது தொடர்பில்   எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை  நீர்ப்பாசன அமைச்சு எதிர்ப்பதாகவும்  இந்த தீர்மானத்தை அதிகாரிகள் மீளாய்வு செய்ய வேண்டும்' என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவரத்தன கூறியுள்ளார்.

நீர்பாசன அமைச்சின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்பதால் நீர்வழங்கல் அமைச்சர் என்ற வகையில் இது போன்ற ஒரு வரிக்கு ஆதரவாக நான் ஒரு போதும் கையுயர்த்த மாட்டேன்' என அவர் கூறினார்.

சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter