அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 22 அக்டோபர், 2012

பசில், கோட்டாபய பங்கேற்ற நிகழ்வில் கடமை தவறிய இரு பொலிஸார் இடைநிறுத்தம்



பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் பாதுகாப்பு வழங்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் இருவர் தங்களின் கடமையை அலட்சியம் செய்தமைக்காக அவ்விருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 07 இலுள்ள 120 வருடங்கள் பழமை வாய்ந்த குதிரைப் பந்தயத்திடல் பார்வையாளர் கூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறக்கப்பட்ட தினத்தன்று பாதுகாப்பு கடமையில் சரியாக ஈடுபடாத இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையே கறுவாத் தோட்ட பொலிஸார் இன்று திங்கட்கிழமை இடைநிறுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது மோட்டார் சைக்கிள் ஒன்று மேடைக்கு அருகில் சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

"இதன்போது, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மோட்டார் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் இருந்துள்ளனர்.

இதனால் கடமையில் அலட்சியம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்" என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. (சுபுன் டயஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter