அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 1 அக்டோபர், 2012

ஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் பலி; 60 பேர் காயம்



ntrinfor.tk
ஆப்கானிஸ்தானில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 13 பேர் பலியாகியுள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஹொஸ்ட் நகரிலேயே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பலியானவர்களில் 3 நேட்டோப் படையினர், மொழிபெயர்ப்பாளர், பொலிஸார் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்த நாட்டைச் சேர்ந்த படையினர் பலியானார்களென்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

படையினர் வாகனத்திலிருந்து இறங்கிவரும்வரை தாக்குதல்தாரி காத்திருந்து குண்டை வெடிக்கவைத்ததாகவும்  பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter