அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 1 அக்டோபர், 2012

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச் சபைக் கூட்டத்தில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரை!



வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவராக அமைச்சர் சென்றுள்ளார். இந்த பிரதிநிதிகள் குழுவில் அமைச்சர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச் சபைக் கூட்டம் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நிலைமை, எதிர்கால செயற் திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், உலக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
முக்கியமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, அந்த மாகாணங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சர் வெளிநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கவுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் பதிலளிக்க தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter