அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்.

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
நிந்தவூரில் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்.
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.
இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளைப் பொறுப்பாளர் அதிபர் ஏ.எல்.நிசாமுத்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் முற்றத்திலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் நிந்தவூர் பிரதான வீதி வளியாகச் சென்று நிந்தவூர் பிரதேச செயலகத்தை ஊடறுத்து வெட்டாற்றுப் பாலத்தில் முடிவடைந்தது.
பாடசாலை மாணவர்களாலும், ஜமா அத்தே இஸ்லாமி தொண்டர்களாலும் வீதிகளால் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் தேசியக் கொடிகள் பொருத்தப்பட்டன.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter