-செயிட் ஆஷிப்-
நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மூவரின் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை அதன் தவிசாளர் ஏ.எல்.ஏ.தாஹிர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அமர்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பிரதித் தவிசாளர் முஹம்மட் அன்ஸார், ஜப்பார் அலி மற்றும் நௌசாத் அலி ஆகிய மூவரும் பகிஷ்கரித்து சபை அமர்வுக்கு சமூகமளித்திருக்கவில்லை.
இந்நிலையில் இவ்வரவு-செலவுத் திட்டம் சபைக்கு சமூகமளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெப்பையினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வரவு-செலவுத் திட்டம் சபைக்கு சமூகமளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெப்பையினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக