அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

சர்வதேச அல்குர்ஆன் மனன போட்டியில் இலங்கை மாணவன் முதலாமிடம்


சவூதி அரேபியா மக்கா நகரில் 83 நாடுகள் பங்குபற்றிய சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் மாணவர் ஆவார்.

சர்வதேச ரீதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்து இன்று 11-12-2012 (புதன்கிழமை) நாடு திரும்பும் மாணவன் ரிஸ்கானுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்படவுள்ளது.

விமான நிலையத்திலிருந்து கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசலை வந்தடையும் மாணவனை, கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter