அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை.


ஊடக அறிக்கை
09.10.1434
17.08.2013

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக..

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை.

இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள் இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2006ஆம் ஆண்டு  சகல தரப்பு உலமாக்களினது அங்கீகாரத்தோடும் உடன்பாட்டோடும் ஐந்து தீர்மானங்களை மேற்கொண்டது என்பதையும் முஸ்லிம் சமூகம் அறிந்துவைத்துள்ளது என நம்புகிறோம்.

இத்தீர்மானங்களின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டுகளில் தலைப்பிறைத் தொடர்பான முடிவுகள் பெறப்பட்டு வந்தன. இவ்வாண்டு றமழான் மாதத் தலைப்பிறையும் ஷவ்வால் மாதத் தலைப்பிறையும் வழமைபோல் குறித்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே முடிவ செய்யப்பட்டன. ஆயினும் இம்முறை ஷவ்வால் மாதத் தலைப்பிறை முடிவு செய்யும் விடயத்தில் பிறையை வெற்றுக் கண்ணால் கண்ட சாட்சிகளை உறுதிசெய்யும் விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றியமை உண்மையாகும்.

இவ்வாறு குறித்த விடயத்தில் சில உலமாக்கள் முரண்பட்ட போதிலும் தலைப்பிறையைக் கண்டதாக கூறிய சாட்சிகளை தீர விசாரித்து உறுத்திப்படுத்தியதைத் தொடர்ந்து பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற பெரிய பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமயப் பண்பாட்டலவல்கள் திணைக்களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துவோரின் ஏகமனதான உடன்பாட்டுடன் இவ்வருட ஷவ்வால் மாதத் தலைப்பிறை 09.08.2013 ஆந்திகதி வெள்ளிக் கிழமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013.08.17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது. பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது பற்றி உலமா சபைத் தலைவர் அவர்கள் 2013.08.08 ஆம் திகதி 01:00 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவையில் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் கிண்ணியா மூதூர் பிரதேச மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்பதை உணர்ந்த தலைமையகம் வருந்திக் கொள்கிறது.

இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்தச் சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு செயற்பட இரு சாராரும் இணங்கி இதனை பகிரங்கப்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல்: நேரடித் தகவல்

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல்: நேரடித் தகவல்

கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சம்பவ இடத்திலிருந்து BBC தமிழோசைக்கு கிடைத்த தகவல்


இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சம்பவ இடத்திலிருந்து தமிழோசைக்கு கிடைத்த தகவல்

சனி, 10 ஆகஸ்ட், 2013

பன்சலையில் மணியடித்து இனவாதிகளை கூட்டி, கிரண்ட்பாஸ் பள்ளி மீது தாக்குதல் (Updated)

பன்சலையில் மணியடித்து இனவாதிகளை கூட்டி, கிரண்ட்பாஸ் பள்ளி மீது தாக்குதல் (Updated)

breaking newsகிரண்ட்பாஸ் சுவர்ணசிட்டி வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது  இனவாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. மஹ்ரிப் தொழுகைக்கு சுமார் 5 நிமிடங்களுக்கு முன் அங்கு வந்த இனவாதக் கும்பல் பள்ளிவாயல் மீதும், பள்ளிவாயலின் பிரதான நிர்வாகியின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு மகரிப் தொழுகைக்கு வந்த சில முஸ்லிம் சகோதரர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்காக இனவாதிகளை சேர்ப்பதற்கு அருகில் உள்ள பன்சலை ஒன்றில் இருந்து மணி அடித்து கூட்டத்தை இனவாதிகள் திரட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் நடைபெற்ற போது அங்கு காவலுக்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தாகவும் அறியவருகிறது.
அதேவேளை தற்பொழுது நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் உட்பட, கலகம் அடக்கும் பொலிஸாரும் அங்கு குழுமியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.  பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இதை உறுதிப் படுத்த முடியவில்லை.
முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடிவருகின்ற நிலையிலும், கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் செயற்பட பௌத்தசாசன அமைச்சு செயலாளர் உறுதியளித்துள்ள நிலையிலும் இவ்வாறான தாக்குதலை பௌத்த இனவாதிகள் மேற்கொண்டிருப்பது கோழைத் தனமானது என வர்ணித்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர், இதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவிடம் உடனடியாக தொடர்புகொண்டு அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து தான் விளக்கிக்கூறியதாகவும், அதற்கு அவர், குறிப்பிட்ட பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

பிந்திக்கிடைத்த தகவல்கள்

இனவாதிகளின் தாக்குதல் காரணமாக பள்ளிவாயலின் மூன்று மாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிவாயல் சுற்றயல் பகுதிகளில் பதற்றம் இன்னும் குறையவில்லை. பள்ளிவாயலை அகற்றுமாறு ராவண பலய என்ற பௌத்த தீவிரவாத அமைப்பு விடுத்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது இங்கு குறிப்பிட தக்கது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்ட வன்முறை சம்பவங்களில் 2 போலீசார் உட்பட 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு தற்போது பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா வருகை தந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன் பெருநாளா...? நோன்பா...?

வியாழன் பெருநாளா...? நோன்பா...?

வியாழன் பெருநாளா...நோன்பா...முக்கால் நாளாக முஸ்லிம் சமுகம் கேட்டு ஓய்ந்த கேள்வி இது. புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை விடையின்றித் தவித்த இக்கேள்விக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி முற்றுப்புள்ளி வைக்கிறார். அது ஒரு அருமையான விளக்கம். அந்த விளக்கத்தில் ஒரே ஒரு கேள்வியையும் ஒரு பத்வாவையும் தவிர அனைத்துக்கும் தெளிவான விடை இருந்தது. அவற்றை பின்னர் பார்போம்.

புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை சுமார் முக்கால் நாள் முஸ்லிம் சமுகம் குட்டை குழம்பிய கதையாகியது. இதே போன்றதொரு பெருநாள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பும் சமூகத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்தப் பெருநாள் இறுதியாக ஸஹர் நேரத்தில் அறிவிக்கப்பட்டதுதிடுதிப்பாக வந்த அந்தப் பெருநாளை முஸ்லிம் சமூகம் வெகு 'விமர்சனத்துடன்கொண்டாடியது. அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த ஞாபகம் இன்னும் எனது நினைவை விட்டு அகலவில்லை.
'ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது அவர்களின் தீர்மானத்திற்கேற்ப செயற்படுங்கள்'என்ற வாசகத்தை ஒரு திக்ர் போல அன்றைய இரவு முழுவதும் உச்சரித்துக் கொண்டிருந்தேன் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் கூறுவதற்காக...
இம்முறை அதனை நான் செய்யவில்லை. காரணம் கள நிலைவரங்கள் திருப்திகரமான தகவல்களைத் தருவதாக இல்லை. குட்டை நன்றாகக் குழம்பியே இருந்தது. பலருடைய மனநிலையை அவதானிக்கும் போது ஜம்இய்யதுல் உலமாவுக்கு சார்பாக சிந்திக்கும் போக்கில் அவர்கள் இல்லை என்பது புரிந்தது. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானதுஅதனை நடைமுறைப்படுத்துங்கள் என குழம்பிப் போயிருப்பவர்களுக்கு நான் கூற முற்பட்டால் இரவு முழுவதும் தொலைபேசி விவாதம் நடாத்த வேண்டி வந்திருக்கும். தற்செயலாக ஜம்இய்யதுல் உலமா விரும்பாத ஒரு வார்த்தை எனது நாவிலிருந்து  வெளிப்பட்டு விட்டாலோ இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஜம்இய்யதுல் உலமாவை விமர்சிக்கின்றது என்றுகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விழைபவர்களும் இல்லாது போக மாட்டார்கள்.
எனவே குழம்பிய சமூகத்தை உரியவர்களே கையாளட்டும் என்ற நோக்கில் நான் தொலைபேசி  இயக்கத்தை நிறுத்தி விட்டேன். பேசுவதின் மூலம் வருகின்ற தொல்லைகளை விட அமைதியாக இருப்பது குறித்து வரும் விமர்சனம் பாதிப்புக் குறைந்தது என்ற கணிப்போடு...
இருப்பினும் பெருநாளாநோன்பாஎன்ற குழப்பத்தில் சமூகம் அல்லோலகல்லோலப்பட்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.
பல ஊர்கள் வியாழன் பெருநாள் கொண்டாடுவதாக தீர்மானித்து விட்டன. நோன்பு பிடிப்பது ஹராம் என்ற பத்வாக்கள் மின்னல் வேகத்தில் பரவியிருந்தன. விமர்சனங்களும் கேள்விக்கணைகளும் ஓய்வதாகத் தெரியவில்லை.
இவற்றையெல்லாம் சரிகண்ட நிலையில் நான் இதனை எழுதவில்லை. எனினும் சமூகத்தின் நிலை வியாழன் பிற்பகல் ஒரு மணிவரை இவ்வாறு தான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதற்கு யார் காரணம்?
பக்கச்சார்போடு குறைகளை ஒருபக்கம் வைத்துப் பேசி விடாமல் படிப்பினை பெறும் நோக்கில் நடுநிலையாக சிந்தித்தால் நடந்துமுடிந்த குழப்பத்துக்கான பொறுப்பின் பங்குகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இனியும் இப்படியொரு குழப்பம் சமூகத்தில் வரக்கூடாது என்ற ரீதியில் இதுபற்றி சிந்திப்பது சமூகத்தின் பொறுப்பாளர்களது தார்மீகக் கடமையாகும்.
சமூகம் ஹலால் விடயத்தில் கட்டுப்பாடாக நடந்து கொண்டது யாவரும் அறிந்ததே. மிகச்சிலர் ஹலால் விடயத்தில் சிற்சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அதனை வெளிக்காட்டி சமூகத்தைப் பிளவுபடுத்த முயலவில்லை.
எனினும் பிறை விடயத்தில் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்ததையே பார்க்கிறோம். அவ்வாறாயின் ஏன் அது நடந்தது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஹலால் இனவாதிகளால் வீசப்பட்ட ஒரு கணை. அதன் பாதிப்பை முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனும் உணர்ந்திருந்தான். எனவே பொறுப்பாளர்கள் விவகாரத்தை கையாளுமட்டும் சமூகம் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது. அதுமட்டுமல்லஹலால் விவகாரம் ஒரு நாளோடு முடிவடைவதல்ல. அது இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் இருப்போடு தொடர்பானதொரு பாரிய விவகாரமாகும். அதில் சமூகத்தரப்பினர்கள் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்கவோ தாம் நினைத்தவாறு செயற்படவோ முன்வரவில்லை.
பிறை விவகாரம் அவ்வாறானதல்ல. அது ஒரு நாளோடு முடிவடைந்து விடுகிறது. அத்துடன் முடிவு அவசராமாகத் தேவைப்படும் விவகாரமும் கூட. அதுமட்டுமல்ல நோன்பு நோற்பது ஹராமா?பெருநாள் கொண்டாடுவது ஹராமாஎன்று சிந்தனையைக் குழப்பும் சீரியஸான ஒரு மார்க்கப்பிரச்சினையுமாகும். இதனை ஆற - அமர விட்டுத் தீர்க்க முடியாது. 'இரண்டு மணித்தியாலங்கள் நாம் இதற்காக செலவிட்டோம்என ஜம்இய்யதுல் உலமா கூறுவதை குறைத்து மதிப்பிடாவிட்டாலும் இன்னும் சில மணித்தியாலங்கள் செலவிட்டு சமூகம் குழம்பாமல் தடுக்க முடிந்திருந்தால் அதனைப் பிழை என்று யார் கூறுவார்கள்?
சமூகத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் தலைவர்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும். மூன்று வகையில் ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம். அந்த மூன்றுக்கும் உரிய கவனத்தைக் கொடுக்காமல் கட்டுப்படும் தன்மையை சமூகத்தில் எதிர்பார்க்க முடியாது. இதற்கு மாற்றமாகதலைமைத்துவமிருக்கிறது எனவே கட்டுப்படுங்கள். அந்தத் தலைமைத்துவம் தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் கட்டுப்படுவது கடமையே என்று கூறி சமூகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை.
ஒரு சமூகம் பின்வரும் மூன்று நிலைகளில் ஒரு தலைமைக்குக் கட்டுப்படலாம்.
1.அதிகாரம்
2.பக்தி சிரத்தை
3.விளக்கம்
அதிகாரம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டபூர்வமாக எவரிடமுமில்லை. யாரும் யாருக்கும் அந்த அதிகாரத்தை வழங்கவுமில்லையாரும் எவரிடமிருந்தும் அந்த அதிகாரத்தைப் பெறவுமில்லை. ஒரு அரசின் தலைவராக இல்லாதவரை ஒரு சமூகத்தைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கிருப்பதாக எவரும் வாதிட முடியாது. இத்தகைய அதிகாரம் தன்னிடமிருந்தால் அதன் மூலம் சமூகத்தைக்கட்டுப்படுத்துவதும் அதற்குக் கட்டுப்படுமாறு கூறுவதும் கட்டுப்பாட்டின் ஒரு வகையைச் சேர்ந்ததாகும்.
பக்தி சிரத்தை: இந்தக் கட்டுப்பாடு தலைவர் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் வருவதாகும். தலைவர் எதைச்சொன்னாலும்ஏன்எதற்குஎன்று கேட்காமல் கட்டுப்படும் நிலையை இது குறிக்கிறது. விவகாரங்களை தெளிவாக விளங்கினாலும் சரிவிளங்காவிட்டாலும் சரி தலைவர் மீதுள்ள பக்தி சிரத்தை இந்தக்கட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கும். இதன் போது கட்டுப்படுபவர்கள் தலைவர் சரியாபிழையாஎன்று கூடப்பார்க்க மாட்டார்கள். எங்களது தலைவர் சொல்லிவிட்டார். எனவே அது சரியாகத்தானிருக்கும் என்பதே இத்தகையவர்களது நம்பிக்கை.
விளக்கம்: ஒன்றைக் குர்ஆன்ஸுன்னா அடிப்படையிலும் விஞ்ஞான ரீதியாகவும் விளங்கிக்கட்டுப்படுவதை இது குறிக்கும். தெளிவானதொரு விளக்கம் கிடைக்கின்ற போது சமூகத்தில் இந்த வகையான கட்டுப்பாடு அதிகரிக்கின்றது. இத்தகைய கட்டுப்பாட்டையே தலைமைத்துவங்கள் பெரிதும் வரவேற்க வேண்டும். தமது அதிகாரத்தின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதையோ அல்லது தம்மீது சந்தேகம் கொள்ளாமல் கேள்வி கேட்காமல் சொன்னதை அப்படியே செய்துவிட்டுப் போக வேண்டும் என்ற வகையான கட்டுப்பாட்டையோ இஸ்லாமியத் தலைவர்கள் மக்களிடம் எதிர்பார்க்கக் கூடாது.
தெளிவான மார்க்க விளக்கத்தினூடாகவும் தர்க்கரீதியான விஞ்ஞான விளக்கங்களினூடாகவும் சமூகத்தை அறிவூட்டி கட்டுப்பட வைப்பதே கட்டுப்பாடுகளில் சிறந்தது. தலைவர் வஹி அறிவிக்கப்படும் ஒரு நபியாக இருந்தால் பக்தி சிரத்தையோடு அவருக்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறுமில்லை. தலைவர் ஆட்சியதிகாரத்தைக் கொண்டவராக இருந்தால்அதிகாரத்தின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமுண்டு என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இரண்டுமில்லாத நிலையில் தலைவர்கள் தெளிவான விளக்கங்களை மக்கள் முன் வைத்து சமூகத்தைக் கட்டுப்படுத்த முயல்வதே சிறந்தது.
பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...
விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு பத்வாவையும் ஒரு வினாவுக்கான விடையையும் தவிர விளக்கம் உண்மையில் திருப்திகரமாகவே இருந்தது.
வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?
இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவாஅப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.
தலைப்பிறையைப் பிரகடனம் செய்ய வேண்டிய பொறுப்பாளர்கள் தேவையான விளக்கத்தை ஏற்கனவே கொடுக்காமல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை காத்திருந்து விட்டு சமூகத்தை மாத்திரம் குறை சொல்வது முறையல்ல.
அந்த விளக்கமின்மையால் நோன்பை விட்டவர்களில் பலர் வருந்தினார்கள். அந்த வருத்தத்துக்கு நாமும் காரணம் என்பதை உணர்ந்து பிறை தீர்மானித்த பொறுப்பாளர்கள் தவ்பா செய்யாமல் நோன்பை விட்டவர்களைப் பாவிகளாக்கி அவர்கள் தவ்பா செய்து நோன்பையும் கழா செய்ய வேண்டும் என்று பத்வாக் கொடுப்பது ஷரீஆ தர்மத்துக்கு எந்தவகையிலும் பொறுத்தமானதல்ல.
ஜம்இய்யதுல் உலமா தலைவரின் விளக்கம் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டேன். அது சமூகத்திற்கு ஏற்கனவே கிடைத்திருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து. இருப்பினும் மேற்குறிப்பிட்ட பத்வாவும் மேலே கேட்கப்பட்ட விடையில்லாத வினாவும் கேட்போருக்கு உணர்த்திய உண்மை யாதெனில்,
'சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.'
சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு இத்திசையில் தொடர்ந்தும் செல்லுமானால் ஒற்றுமைக் கோஷம் வாய்க்கும் வார்த்தைக்கும் இனிமையாக இருக்கலாம். சமூகம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிய வண்ணமே இருக்கும்.


உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
usthazhajjulakbar.org

நோன்பு ஒரு விருந்தாளியல்ல…

நோன்பு ஒரு விருந்தாளியல்ல…

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்!!


ஆம்! இவ்வாறு “வந்துவிட்டது
”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை ரமழான்களை வழியனுப்பியிருப்போம்! எதிர்வரும் ரமழானும் அவற்றுள் ஒன்றாக சென்றுவிடத்தான் போகிறது. சந்தேகமில்லை. எனினும்நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதே சந்தேகம்!ரமழான் வந்துவிட்டால் எம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது
என்பார்கள். ஷவ்வால் தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது என்பார்கள்.
ரமழான் வெறுமனே வந்துவிட்டுச் செல்வதற்காக வருகின்றதொரு மாதம் அல்ல. ரமழான் எங்களை அழைத்துச் செல்வதற்காக வருகின்ற மாதம். எனினும் அது எம்மை அழைக்கவில்லை போலிருக்கிறது. அல்லது அதன் அழைப்பு எங்களது செவிகளுக்கு எட்டவில்லை போலிருக்கிறது. அதனால்தான் ரமழான் எம்மை விட்டுச் செல்கின்றபோது “ரமழானும் முடிந்து விட்டது!” என்கிறோம். ஏதோ அவசர அவசரமாக வந்துவிட்டுப் போன ஒரு விருந்தாளியைப் போல!  விருந்தாளி எங்களை அழைத்துக் கொண்டு போக வருவதில்லையே!
ரமழான் ஒரு விருந்தாளியல்ல. விருந்தாளியாக வந்தால்தான் “வந்தார்போனார் என்று கூறி கதையை முடித்து விடுவோம். ரமழான் ஒரு விருந்தாளியல்ல. ரமழான் ஓர் அழைப்பாளி! எங்க ளுக்கு ஓர் அழைப்பை விடுக்க வந்த அந்த அழைப்பாளரை வந்தார் போனார் என்று கூறித் தட்டிக்கழிக்க முடியாது.
அழைப்பாளர் வந்தார் எனின்அவர் ஏன் வந்தார்அவர் கொண்டு வந்த அழைப்பு எதுவந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களாஅவரது அழைப்பு எந்த இலக்கை நோக்கி உங்களை முன்னேறச் சொல்கிறதுஅதற்காக நீங்கள் செய்ய வேண்டிய ஆயத்தங்கள்மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் பற்றி அந்த அழைப்பாளர் என்ன கூறினார்போன்ற கேள்விகள் அழைப்பாளரின் வருகைக்குப் பின்னால் இருக்கின்றன. ரமழானை வரவேற்று வழியனுப்பி வைப்பவர்கள் இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை அறியாது “ரமழானும் முடிந்து விட்டது. முடிந்த அவசரத்தைப் பாருங்களேன்” என்று கூறலாகாது.
அவ்வாறாயின் ரமழான் விடுக்கும் அழைப்பு எதுபதிலை அறிந்து கொள்ள நபிகளாரின் காலம் வரை சற்றே பின்னோக்கிச் செல்வோம்.
நபித்துவத்தின் பின்னர் பதினைந்து வருடங்கள் உருண்டோடுகின்றன. இக்காலப்பகுதியில் நபிகளாரின் பயணம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி ஒரு ஸ்திரத்தன்மையை அடைகிறது. மக்காவையும்தாயிபையும் கடந்து மதீனாவை நபிகளார் அடைந்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆட்சிப் பிரதேசமாகிய வானுலகத்தை (மிஃராஜின் போது) பார்த்த நபியவர்கள்இப்போது அவனது ஆட்சிக்குரிய ஒரு பிரதேசத்தை மண்ணுலகில் (மதீனாவில்) காண்கிறார்கள். எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கள் புடைசூழ மக்காவில் இருந்தவர்கள் தீனின் காவலர்கள் (அன்சார்கள்) புடைசூழ மதீனாவை ஆளுகிறார்கள். கொள்கை வடிவில் இதுவரை முன்வைக்கப்பட்ட இஸ்லாம் இப்போது நடைமுறை வடிவம் பெறத் துவங்கியிருக்கிறது. இஸ்லாம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடுமோ என்ற அச்சம் நீங்கிஅது முளைத்தே தீரும் என்ற நம்பிக்கை இப்போது துளிர்விட்டிருக்கிறது. சிதறிய தனிமனிதர்களாக (மக்காவில்) வாழ்ந்த முஸ்லிம்கள்,இன்று ஒன்றுபட்ட ஈமானிய சமூகமாக (மதீனாவில்) மாறிவிட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் அழிவின் விளிம்பிலிருந்த மனித சமூகத்திற்கு விடுதலைக்கும் விமோசனத்திற்குமான அத்திபாரம் போடப்பட்டாகி விட்டது.
இப்போது முஸ்லிம் சமூகம் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது. செல்வமும்செல்வாக்கும்ஆட்சியும் அதிகாரமும் அந்த சமூகத்தைத் தேடி வரவேண்டிய காலம் வெகுதூரத்திலில்லை.
ஒரு சமூகம் இந்த நிலையை அடைந்து விட்டால் அதன் அடுத்த கட்டம் ஏனைய சமூகங்களை தனது விருப்பு வெறுப்புகளுக்கும் அடிபணிய வைப்பதுதான். உலகில் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்த சமூகங்களின் வரலாறுகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஒரே ஒரு சமூகத் தைத் தவிர அதுதான் அல்லாஹ்வின் தூதர் 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபியாவில் உருவாக்கிய குர்ஆனிய சமூகம்!
அந்தக் குர்ஆனின் சமூகம் ஏனைய சமூகங்களிலிருந்து இவ்வாறு வேறுபடக் காரணமென்ன?
அச்சமூகம் தனது ஆட்சிபீடத்தில்தனது சொந்த விருப்பு வெறுப்புகளையும்ஆசாபாசங்களையும் அமர்த்தவில்லை என்பதுதான்!
இது எப்படி சாத்தியமாயிற்று! அது உலகில் சாத்தியமாகக் கூடியதாஆட்சிக்கு வந்தவர்களில் தமது ஆசாபாசங்களுக்கும்விருப்பு வெறுப்புகளுக்கும் இடம்கொடாதவர்கள். உலகில் இருக்கிறார்களா! அதிசயம்! அதிசயம்!!
அதிசயம்தான். ஆனால் உண்மை! எவ்வாறு என்கிறீர்களா?
நபிகளார் உருவாக்கிய அந்த குர்ஆனிய சமூகத்திற்கு 15 வருடங்கள் செல்கின்றன. அது நுபுவத்தின் 15ம் வருடம். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு. பல்வேறு பயங்கரமான கட்டங்களைத் தாண்டி வெற்றிப் படிகளில் முஸ்லிம் சமூகம் கால்வைத்திருக்கும் மதீனாவின் ஆரம்பப் பொழுதுகள். மனித சமுதாயத்தின் விடுதலைக்கும்விமோசனத்திற்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய ஒரு சமுதாயத்தின் உதய நேரம். அல்லாஹ்வின் கட்டளை வருகிறது.
“ஈமான் கொண்டவர்களே! (நோன்பு நோற்கத் தயாராகுங்கள்)....
....உங்களுக்கு முன்னாலிருந்த சமுதாயத்திற்கு விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்படுகிறது....
.....(காரணம்?) நீங்கள் இறையச்சம் பெறலாம் (என்பதற்காக)
பதினைந்து வருடங்களாக இறையச்சமின்றி வாழ்ந்த ஒரு சமூகத்துக்கு அல்லாஹ் இக்கட்டளையைப் பிறப்பிக்கவில்லை. அல்லது பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நோன்பின் மூலம் அல்லாஹ் அச்சமூகத்திற்கு இறையச்சத்தைப் போதிக்கிறான் என்பதும் இதன் பொருளல்ல.
உண்மையாதெனில்அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அளவிலா அன்பு கொண்ட சமூகமே அது. அந்த சமூகத்திற்கு இறையச்சம்இறையன்பு போன்றவற்றைப் புதிதாகக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.
என்றாலும் ஒரு சமூகம் பலவீனமாக இருக்கும்போது அதனை வழிநடத்தத் தேவைப்படும் இறையச்சம் வேறு பலம் பெறும்போது அச்சமூகத்தில் இறையச்சம் வகிக்கும் பங்கு வேறு. பலவீனமாக இருக்கும்போது தன்னிடமிருப்பவைகளை தியாகம் செய்து இஸ்லாத்தை வாழவைக் கும் துணிவை வழங்குகிறது இறையச்சம். பலத்துடன் இருக்கும்போது வரம்புகளை மீறாமல்,அடுத்தவர் உரிமைகளைப் பறிக்காமல்அடக்குமுறைகளைப் பிரயோகிக்காமல் இஸ்லாமியப் பணியில் ஈடுபடும் ஆற்றலை வழங்குகிறது இறையச்சம். இது இறையச்சமுள்ள சமூகத்தின் நிலை. இறையச்சம் இல்லாத சமூகங்களைப் பொறுத்தவரை அவற்றின் வரலாறே வேறு!
அத்தகைய சமூகங்கள் நசுக்கப்படும் போதெல்லாம் நீதிக்குக் குரல்கொடுக்கும் சமூகங்களாக இருந்திருக்கின்றன. எப்போது அந்த சமூகங்கள் ஆட்சிக்கு வருகின்றனவோ அப்போது அவை அநீதிக்குத் துணைபோகின்றன. இதுவே வரலாறு.
இந்த வரலாறு முஸ்லிம்களாலும் மீட்டப்படலாகாது. முஸ்லிம்கள் “பலத்திலும் நீதி, பலவீனத்திலும் நீதி என்ற கோட்பாட்டைக் கடைபிடிப்பவர்கள். ஆனால் அந்தக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் பாரியதொரு சவாலுக்கு அவர்களும் முகம்கொடுத்தாக வேண்டும். மனிதப் பலவீனங்கள், உணர்ச்சிகள்ஆசாபாசங்கள்விருப்பு வெறுப்புகள் என்பவையே அந்த சவால். மனிதர்கள் என்ற வகையில் முஸ்லிம்கள்முஸ்லிமல்லாதவர்கள் அனைவருக்கும் இந்த சவால் பொதுவானதே.
ஒரு சமூகம் பலவீனமாக இருக்கும் போது இந்த சவாலை எதிர்கொள்வது சுலபம். காரணம் தனது இருப்பைப் பாதுகாப்பதற்காக அச்சமூகம் தனது ஆசாபாசங்களையும்விருப்பு வெறுப்புக்களை யும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் பலம் பெறும்போதுஏனைய சமூகங்களை தனது செல்வாக்கிற்கு அடிபணியவைக்கும் ஆற்றலைப் பெறுகின்றபோது தமது ஆசைகளையும் விருப்பு வெறுப்புகளையும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் அச்சமூகத்துக்கிருப்பதில்லை.
இந்த இடத்தில்தான் ஆசைகளை அடக்கியாளும் பயிற்சி ஒரு சமூகத்திற்கு இன்றியமையாததாக மாறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் உலகில் உருவாக்கிய உன்னத சமூகம் இது போன்ற தொரு கட்டத்தை நெருங்கியவேளையில் தான் அல்லாஹ் அந்த சமூகத்துக்கு ஆசைகளை நெறிப்படுத்தும் பயிற்சியை வழங்க நினைத்தான் போலும்அல்லாஹு அஃலம்.
அல்லாஹ்வின் விருப்பங்களுக்கு விளக்கம் சொல்லும் முயற்சியல்ல இது. எனினும் இறைவழிகாட்டலில்உருவாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாற்றையும்அதன் போக்கையும் அவதானிக்கும்போது குர்ஆனின் ஒவ்வொரு வழிகாட்டலும் அந்தச் சமூகத்தின் எத்தகைய தேவைகளை நிறைவு செய்திருக்கின்றன? எவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி யிருக்கின்றனஎத்தகைய சவால்களையும்சூழல்களையும் எதிர்கொள்ளும் பயிற்சிகளையும் ஆற்றல்களையும் வழங்கியிருக்கின்றனஎன்பவற்றைக் காணலாம்.
நோன்பு ஒரு சமூகத் தேவையை நிவர்த்தி செய்வதற்கும்ஒரு சவாலை எதிர்கொள்வதற்குமாக விதியாக்கப்பட்ட கடமை என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாகாது. மாறாக அது ஒரு இபாதத்.
இருப்பினும் இஸ்லாம் விதித்துள்ள (இபாதத்துகள்) வணக்க வழிபாடுகள் மறுமையை மட்டும் இலக்காகக் கொண்டு உலகத்தைப் புறக்கணிக்கும் இயல்பு கொண்டவைகளல்ல. உலக வாழ்க்கையிலிருந்து மனிதனைப் பிரித்து வேறுபடுத்தி அவனது ஆன்மாவுக்கு மட்டும் உரமூட்டும் தன்மை கொண்டவையாகவும் அவை இல்லை. மாறாகஉலக வாழ்க்கையை நெறிப்படுத்தி அதனூடாக மனிதனுக்கு விமோசனத்தை வழங்கும் நோக்கம் கொண்டவையாகவே இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் காணப்படுகின்றன.
அந்த வகையில் நோன்பின் உலகப் பயன்பாடுகளுள் ஒன்றைஸஹாபிகள் சமூகத்தின் வரலாற்றில் நாம் பார்க்க முடியும். அந்த சமூகம் பலவீனமாக இருந்த கட்டத்தைத் தாண்டி பலம்பெறும் நிலையை அடைந்தபோதுபல்வேறு ஆசைகளுக்கு அடிமையாகிதனது நோக்கத்தை உலகில் மறந்து விடாதிருக்கும் ஓர் உன்னத பண்பாட்டுப் பயிற்சியின் தேவை அதற்கிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் அல்லாஹ் அச் சமூகத்துக்கு நோன்பைக் கடமையாக்குகிறான். நோன்பு அல்லாஹ்வின் விருப்பங்களுக்காக மனிதன் தனது விருப்பங்களைத் தியாகம் செய்யும் ஆன்மிகப் பண்பாட்டுப் பயிற்சியை வழங்குகிறது. இந்த உண்மையைப் புரியவைக்கிறது நோன்பின் மகத்துவத்தை உணர்த்தவந்த பின்வரும் ஹதீஸ் குத்ஸி:
“ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு (நற்) செயலும் அவனுக்குரியது. நோன்பைத் தவிர. அது எனக்குரியது. அதன் கூலியாக நானே இருக்கிறேன். ஏனெனில் அவன் எனக்காக தனது உணவையும்குடிப்பையும்ஆசை களையும் விட்டுவிடுகிறான்.
ஆம்! அல்லாஹ்வின் ஆசைகளுக்காக தனது ஆசைகளைத் தியாகம் செய்யும்போதுதான் நோன்பின் மகத்துவம் அதி உச்சத்தை அடைகிறது.
இத்தகைய ஆன்மிக பண்பாட்டுப் பயிற்சி உலகை வழிநடத்தும் சமூகங்களுக்கு வழங்கப்படாதபோதெல்லாம் அச்சமூகங்கள் உலகில் தமது பலத்தையும் அதிகாரத்தையும் பிரயோகித்து தமது ஆசைகளையே நிறைவேற்றிக்கொள்ள முயலுகின்றன. விளைவாக உலகில் குழப்பங்களும்அக்கிரமங்களும் மலிந்து விடுகின்றன.
உலகின் இந்த நிலை மாற வேண்டு மானால் நோன்பு நோற்கும் சமூகம் உலகை வழிநடத்த வேண்டும். ஸஹாபி கள் சமூகம் உலகை வழிநடத்தும் நிலையை நெருங்கியபோதுதான் நோன்பை அந்த சமூகத்தின்மீது அல்லாஹ் கடமையாக்கினான். ஆனால் இன்று நோன்பு நோற்கும் சமூகம் தனது சமூகத்தைதனது கிராமத்தைஏன் தனது வீட்டைக்கூட வழிநடத்த முடியாமல் இருக்கிறது.
நோன்பு வெறும் பசியும் தாகமுமல்ல. உலகில் நடக்க வேண்டிய இஸ்லாமிய பணிக்கும் அந்தப் பணியின் மூலம் உலகில் ஏற்படவேண்டிய பாரிய சமூக மாற்றத்திற்கும் தேவையான ஆன்மிக பண்பாட்டுப் பயிற்சியே நோன்பு!
நோன்பின் அழைப்பு புரிகிறதல்லவா?
நோன்பு ஒரு புறத்தில் சுவனத்திற்கான அழைப்பை விடுக்கிறது. அதனை நாம் இங்கு விளக்கத்தக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அது பற்றிய போதுமான விளக்கங்கள் பரவலாகக் கிடைப்பதன் காரணத்தால்.
நோன்பு மறுபுறத்தில் உலகை வழி நடத்த வேண்டிய முஸ்லிம் சமூகத்தின் பாரிய பொறுப்பையும் அந்தப் பொறுப்பை சுமந்து செயல்படுவதற்கான ஒரு முக்கிய பயிற்சியையும் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறது.
நோன்பின் அழைப்புக்கு முஸ்லிம் சமூகம் செவிசாய்க்குமாஅல்லது அதனை ஒரு விருந்தாளியாகக் கருதி வந்தவரை வழியனுப்புவது போல வழியனுப்பி வைத்துவிடுமா?

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,

அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

usthazhajjulakbar.org


site counter