நிந்தவூர் றியல் இம்றானின் துரித வளர்சியில் மற்றுமோர் மென்பந்து கிரிகெற் சுற்றுப் போட்டி!
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 7இ 8 இ9 ம் திகதிகளில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
றியல் இம்ரான் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக நடைபெறவுள்ள இத்தொடரில் வெற்றி பெறுகின்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 10இ000 ரூபா பணமும் வழங்கப்படும். அதேபோன்று இரண்டாமிடம் பெறும் அணிக்கு கிண்ணத்துடன் 5000 ரூபா பணமும் வழங்கப்படவுள்ளது.
தொடரின் சிறப்பாட்டக்காரர்இ சிறந்த பந்துவீச்சாளர்இ இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் என பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் றியல் இம்ரான் விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணித் தலைவர் எஸ்.எம்.ஆரிப் தெரிவித்தார்.
இச்சுற்றுப்போட்டியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த கழகங்கள் பங்கு பற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. றியல் இம்ரான் விளையாட்டுக் கழகம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கழகமாகும். இக்கழகம் இம்ரான் விளையாட்டுக் கழகத்திலிருந்து முரண்பட்டு வெளியேறிய வீரர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கழகமாகும்.
ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் அம்பாரை மாவட்டத்தில் பல சுற்றுப்போட்டிகளி;ல் கலந்து கொண்டு கிண்ணங்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக