அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 13 பிப்ரவரி, 2013

முஸ்லிம் இளைஞர் மீது பொலிஸார் அகோர தாக்குதல் (படங்கள் இணைப்பு)




(மூதூர் முறாசில்)

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஓருவர் மூதூர் பொலிஸாரின்   தாக்குதலுக்கு உள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது,

மூதூர் ஜின்னா நகர் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது மஹ்ரூப்  அஸ்வர்(வயது:23) என்பவர் இளம் மாடு(கன்று)  ஓன்றை நேற்று மாலை கடும் மழைபெய்து கொண்டிருந்த நிலையில் முச்சக்கரவண்டியில் தனது வீடு நோக்கி கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அம்முச்சக்கர வண்டியை நிறுத்தி பரிசோதித்த  பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் கடுமையாகத் தாக்கிதோடு இன்று அவரை பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter