அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 21 ஜனவரி, 2013

பாதாள உலக குழுக்களை கூண்டோடு ஒழிக்க விசேட திட்டம்!


Gota

பாதாள உலக குழுக்களை முற்றாக ஒழிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுபதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் எனவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதாள உலக குழு தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் தகவல்களை வழங்கினால், நாட்டுக்கு கேடாக இருக்கும் பாதாள உலக குழுக்களை அடக்குவது சிரமமான காரியமாக இருக்காது. எனினும் நாட்டில் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்களை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இது குறித்து தினமும் காவற்துறை நிலையங்களுக்கு தெளிவூப்படுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை பாதாள உலக குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்து கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும், அரசியல்வாதிகள் அல்லது வேறு தரப்பினர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், அவர்களுக்கு எதிராகவூம் தகுதி தராதரமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பாதாளக் குழுக்கள் தடையாக இருப்பதாகவூம் அவர்களை நாட்டில் இருந்து முற்றுமுழுதாக பாதாளக்குழுவினை இல்லாது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter