வெலிக்கடை சிறைச்சாலையில் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் இருந்து இன்று காலை மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதென குறிப்பிட்ட அவர் வைத்தியசாலையில் நாற்பதுக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து பலர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர்களை தேடும் பணிகளில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை வெலிக்கடை சிறையின் ஆயுத களஞ்சியம் கைதிகளால் உடைக்கப்பட்டு 84 துப்பாக்கிகள் காணாமல் போனதாகவும் அதில் 74 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக