அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 27ஆக உயர்வு!



வெலிக்கடை சிறைச்சாலையில் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் இருந்து இன்று காலை மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதென குறிப்பிட்ட அவர் வைத்தியசாலையில் நாற்பதுக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து பலர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர்களை தேடும் பணிகளில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை வெலிக்கடை சிறையின் ஆயுத களஞ்சியம் கைதிகளால் உடைக்கப்பட்டு 84 துப்பாக்கிகள் காணாமல் போனதாகவும் அதில் 74 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter