[ புதன்கிழமை, 05 செப்ரெம்பர் 2012, 08:22.44 AM GMT ]
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் காட்சியில் வைக்கப்பட்டிருந்த வைரத்தை விழுங்கிய சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான வைரத்தையே குறித்த சீனப் பிரஜை விழுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்காட்சியில் பார்வையாளர்களோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இவர் திடீரென வைரத்தை எழுத்து விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக