கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபைக்காக போட்டியிட்ட கடசிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
மொத்தமாக கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 14 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த மாகாண சபையில் 11 ஆசனங்களை தம்வசப்படுத்தியுள்ளது.
இது தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி நான்கு ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தையும் கிழக்கு மாகாண சபையில் கைப்பற்றியுள்ளன.
இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு எந்தவொரு கட்சியும் அறுதிப் பெறுபான்மையை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக