அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 5 மார்ச், 2014

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவினர் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம் பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் ஐ.பி.முகையதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விரத்ததான நிகழ்விற்கு நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள், கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலை ஊழியர்கள், நிந்தவூர் அமானா சனசமூக நிலையத் தொண்டர்கள் ஆகியோர் அனுசரணை வழங்கினர்.
இதில் கலந்து கொண்ட பல நூற்றுக் கணக்கான மக்களிடமிருந்து கேமிக்கப்பட்ட இரத்தப்பைகள் கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமும் கலந்து கொண்டார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter