நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவினர் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம் பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் ஐ.பி.முகையதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விரத்ததான நிகழ்விற்கு நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள், கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலை ஊழியர்கள், நிந்தவூர் அமானா சனசமூக நிலையத் தொண்டர்கள் ஆகியோர் அனுசரணை வழங்கினர்.
இதில் கலந்து கொண்ட பல நூற்றுக் கணக்கான மக்களிடமிருந்து கேமிக்கப்பட்ட இரத்தப்பைகள் கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமும் கலந்து கொண்டார்.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவினர் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம் பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் ஐ.பி.முகையதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விரத்ததான நிகழ்விற்கு நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள், கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலை ஊழியர்கள், நிந்தவூர் அமானா சனசமூக நிலையத் தொண்டர்கள் ஆகியோர் அனுசரணை வழங்கினர்.
இதில் கலந்து கொண்ட பல நூற்றுக் கணக்கான மக்களிடமிருந்து கேமிக்கப்பட்ட இரத்தப்பைகள் கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமும் கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக