
( ஏ.எல்.ஏ.றபீக்பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியின் கவின் கலைப் பிரிவினர்; ஏற்பாடு செய்த சித்திரக் கண்காட்சிக் கூடத் திறப்பு விழா இன்று கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் ஐ.அப்துல் லத்தீப் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சித்திரக் கண்காட்சிக் கூடத்தைத் திறந்து வைத்தார்.
கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைட் , கல்முனை மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌபல் அலி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
பாடசாலை மாணவர்களும், வெளியிலுள்ளோரும் பார்ப்பதற்கான தனித்தனி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் லத்தீப் தெரிவித்தார்.